இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில், கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் முறையை 5 மற்றும் 8 வயது குழந்தைகள் ஆவர்.


சம்பவத்தன்று, தங்கள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்து அச்சிறுமிகளை தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட அச்சிறுமிகள் அலற, பின் இருவருக்கும் ரூ.5 அளித்து இச்சம்பவத்தை பற்றி யாரிடமும் கூறகூடாது என வளியுறுத்தியுள்ளார் அந்த நபர்.


இச்சம்பவத்தால் வேதனைக்குள்ளான அச்சிறுமிகள், பின்னர் தங்கள் பெற்றோரிடம் கூறினார். பின்னர் இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அந்த 60 வயது முதியவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்!