கொடா: ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் 60 வயது பெண்மனி ஒருவர் 6 பேர் கொண்ட குழவால் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள், இச்சம்பவத்தினை வீடியவாக பதிவுசெய்து சமூக வலைதளத்தில் (FaceBook) பதிவேற்றியுள்ளனர்.


பாரான் காவல்துறை அறிக்கையின்படி இச்சம்பவமானது சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நிகழ்ந்துள்ளது, எனினும் 5 தினங்களுக்கு முன்னரே பாதிக்கப்பட்ட மூதாட்டி இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


சமூகவலைதளங்களில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னரே இந்த மூதாட்டி காவல்துறையினரை அனுகியிருப்பது குறிப்பிடத்தகது. 


இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும், பாரான் காவல்துறையினர் IPC 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாதிக்கப்பட்ட மூதாட்டி இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ஒரு மாதத்திற்கு முன்னர் பாரானில் உள்ள அவரது மருமகள் வீட்டிற்கு செல்லுகையில் சேத்தன் மீனா(21) என்னும் நபர் தனது மோட்டார் சைக்கலில் அவரை கொண்டு சென்றுள்ளார். அவரது மருமகள் வீட்டிற்கு கொண்டுசெல்வதற்கு பதிலாக யாரும் இல்லா காட்டுப் பகுதியினுள் அவரை கொண்டுச் சென்று இந்த பலவந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு துணையாக அவரது நணபர்கள் 5 பேரையும் அழைத்துள்ளார்.


மேலும் இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் அவரையும், அவரது குடும்பத்தாரையும் கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர் சேத்தன் நண்பர்கள்.


பாதிக்கப்பட்ட மூதாட்டியின் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களை தேடும் பணி நடைப்பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி அனிஸ் அகமது தெரிவித்துள்ளார்!