7 பயங்கரவாதிகள் உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளதாகவும்; அயோத்தி வழக்கில் SC தீர்ப்பின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம் ஜனம்பூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சில நாட்களுக்கு முன்னதாக, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் உத்தரபிரதேசத்தில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏழு பயங்கரவாதிகள் அடங்கிய குழு ஏற்கனவே நேபாளம் வழியாக உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்து தங்களது மோசமான திட்டத்தை நிறைவேற்ற உள்ளது.


இந்த குழுவில் சில பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனர் மற்றும் உத்தரபிரதேசத்திற்குள் பதுங்கிய ஏழு பேரில் ஐந்து பேரை அடையாளம் காண புலனாய்வு அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. அடையாளம் காணப்பட்ட ஐந்து பயங்கரவாதிகள் முகமது யாகுப், அபு ஹம்ஸா, முகமது ஷாபாஸ், நிசார் அகமது மற்றும் முகமது கௌமி சவுத்ரி. இந்த பயங்கரவாதிகள் தற்போது அயோத்தி மற்றும் கோரக்பூரில் பதுங்கி இருப்பதாக ஆதாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.


SC தீர்ப்யையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச டிஜிபி ஓ.பி.சிங் ஞாயிற்றுக்கிழமை, மாநில காவல்துறை மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், தேவைப்பட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுகுயர்த்து அவர் கூறுகையில்; "நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம். எந்தவொரு சூழ்நிலையிலும், யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் புலனாய்வு இயந்திரங்கள் தயாராக உள்ளன. தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் கூறுகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் விதிக்கப்படும்" என்று சிங் கூறினார்.


அயோத்தி வழக்கு இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான SC-யின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சிடம் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை 2019 அக்டோபர் 16 அன்று ஒத்திவைத்தது. பிரதம நீதியரசர் கோகோய் ஓய்வு பெறுவதற்கு முன்னர் நவம்பர் 17 ஆம் தேதிக்கு முன்னர் உத்தரபிரதேசத்தின் அயோத்தியா மாவட்டத்தில் 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக SC தனது தீர்ப்பை வழங்க உள்ளது.