7 ஆவது ஊதியக் கமிஷன்: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7 ஆவது ஊதியக் கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் டிஏ உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4 சதவிகித அகவிலைப்படி உயர்வு சாத்தியம்


அரசு சார்பில் இந்த அறிவிப்பு வந்தால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (டிஏ) தற்போதைய 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும். குறிப்பிடத்தக்க வகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ உயர்வு, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் நடக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது.


சமீபத்திய தரவுகளின்படி, சில்லறை பணவீக்கம் பிப்ரவரியில் 6.44% ஆகக் குறைந்துள்ளது, முக்கியமாக உணவு மற்றும் எரிபொருட்களின் விலைகள் ஓரளவு குறைந்ததால், அது தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% என்ற மட்டத்திற்கு மேல் உள்ளது.


மார்ச் 13, 2023 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 இல் CPI அடிப்படையிலான பணவீக்கம் 6.52% மற்றும் 6.07% ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், அது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். தற்போது, ​​ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 38% டிஏவைப் பெறுகின்றனர். 


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவை எப்போது? விளக்கம் கொடுத்த அரசு!


இதற்கு முன்னர் 28 செப்டம்பர் 2022 அன்று டிஏ உயர்வுக்கான கடைசி திருத்தம் செய்யப்பட்டு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக, ஜூன் 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான 12 வது மாதாந்திர அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் மத்திய அரசு நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தியது.


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏன் உயர்த்தப்படுகிறது?


விலைவாசி உயர்வை ஈடுகட்டவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்பதை மத்திய அரசு ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அகவிலைப்படியானது வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. இந்த திருத்தம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்கள் முதல் அமலுக்கு வருகின்றன. 


மேற்கு வங்கத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு எதிராக போராட்டம்


இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்தக் கோரி மேற்கு வங்கத்தில் மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கைகள் குறித்து மாநில அரசிடம் இருந்து சரியான பதில் வந்த பிறகே உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி, டிஏ அரியர் கிடைக்காது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ