7th PC Update: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! டிஏ 4% இருக்கலாம் AICPI சூசகம்

AICPI Index DA Hike: ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ. எவ்வளவு உயரும் என்பது தொடர்பான கணிப்பு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 10, 2023, 11:16 AM IST
  • ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ உயர்வு எவ்வளவு?
  • Aicpi இன்டெக்ஸ் ஜனவரி 2023இல்132.3 புள்ளிகள்
  • இது இனி மேலும் அதிகரிப்பதால், ஊழியர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
7th PC Update: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! டிஏ 4% இருக்கலாம் AICPI சூசகம் title=

7th Pay Commission Latest Update: ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ., எவ்வளவு உயரும் என்பது தொடர்பான கணிப்பு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? Aicpi இன்டெக்ஸ் டிசம்பர் 2022க்கான எண்ணிக்கை 132.3 புள்ளிகளாக இருந்தது. ஏஐசிபிஐ இனி வரும் காலங்களில் இதற்கு மேல் செல்லலாம்.

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு தொடர்பான அகவிலைப்படி உயர்வை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால் அது நான்கு சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும், விரைவில் அது 42 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 65 லட்சம் மத்திய ஊழியர்களும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதற்குப் பிறகு, ஜூலை 1, 2023 அன்று, மத்திய ஊழியர்களின் டிஏ மீண்டும் உயர்த்தப்படும்.

ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அதிகரிக்கும்
தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு செய்யப்படுகிறது. டிசம்பரில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, ஜனவரி மாதத்தின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் வரும் ஜூலையில் 4 சதவீதம் டிஏ உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.

உண்மையில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் டிஏ அதிகரிக்கும். ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் செப்டம்பரில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்

ஏஐசிபிஐ 132.8 புள்ளிகளை எட்டியது
டிசம்பர் 2022 எண்ணிக்கை 132.3 புள்ளிகளாக இருந்தது. எனவே, ஜூலை 1 முதல் பொருந்தக்கூடிய டிஏ உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரிக்குப் பிறகு வரும் AICPI குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான DA அறிவிக்கப்படும்.

டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கிறது
ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ, ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது. இப்போது ஜனவரி 2023 இன் DA விரைவில் அறிவிக்கப்படும். இதற்குப் பிறகு ஜூலை 2023 இன் DA அறிவிக்கப்படும்.

தரவுகளை வெளியிடுவம் அரசு முகமை
ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்று முடிவு செய்யப்படும்.மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (All India Consumer Price Index) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விஆர்எஸ் வாங்குவது நல்லதா? யாருக்கு இது பலனளிக்கும்? யாருக்கு பிரச்சனை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News