குஜராத் மாநிலத்தில் எதிரே வந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த லாரி மீது மோதியதால் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.


இதையடுத்து, காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.