அசாம்: அசாம் மாநிலம் கௌகாத்தியில் சிறுநீரை தண்ணீரில் கலந்த பானிபூரி விற்கும் அந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெருவோரமாக இருக்கும் பானிபூரி (Pani Puri) கடையை நடத்தி வருபவர் தன் சிறுநீரை ஒரு கப்பில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் அறுவறுப்பான கோபத்தை கிளப்பும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ALSO READ | ரோட்டுக்கடை பானி பூரிக்கு Bye....நம் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக Tasty பானி பூரி செய்முறை


இந்த வீடியோ அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தது யார் என்பது தெரியவில்லை. எடுத்தவர் இது எடுக்கப்பட்ட இடத்துடன் சேர்த்து இந்த வீடியோவையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.


 



இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் அந்த பானிபூரி கடைக்காரை கைது செய்தனர். ஆனால் அவர் யார் என்ற விபரத்தை வெளியிடவில்லை. இந்த வீடியோ பயங்கரமான வைரலான நிலையில் அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க சொல்லி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் அவரின் மனநிலையை கண்காணித்து வருகின்றனர்.


ALSO READ | அதிர்ச்சியூட்டும் செய்தி: கழிவறை நீரில் பானி பூரி..! வெளியான சிசிடிவி காட்சி..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR