ஆம் ஆத்மி கட்சி தலைவர் உத்தரபிரதேசத்தில் மர்மமான நிலையில் இறந்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசம்: லமித்பூரில் திங்களன்று ஒரு ஆம் ஆத்மி தலைவர் மர்மமான சூழ்நிலையில் மரணமடைந்துள்ளார். இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரபிரதேசத்தின் இணை பொறுப்பாளர் முராரி லால் ஜெயின் ஒரு பாலத்தின் கீழ் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அவரது கைபை அவருக்கு அருகில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


அவர் ஒரு விபத்து காரணமாக இறந்துவிட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், விபத்து எவ்வாறு நடந்தது என்று சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயின் லக்னோவுக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பக் எக்ஸ்பிரஸ் மூலம் லலித்பூருக்கு புறப்பட்டார்.


ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி கூறுகையில்; ஜெயின் தனியாக பயணம் செய்து வருவதாகவும், தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.