கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தில் பெய்த மழையால் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு கண்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


தற்போது மாநிலத்தில் தேங்கியிருந்து நீரின் அளவு குறைந்து வருகின்றது, எனினும் வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டெடுக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 


கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து நிராணப் பொருட்கள், நிதி வழங்கப்பட்டு வருகின்றது. 


அந்தவகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.5 மதிப்பிலான புது ஆடைகள், மருந்து பொருட்களுடன், ரூ.10 லட்சம் கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இச்சம்பவத்தின் போது அவரது தந்தை சுரேஷ் மற்றும் தாய் மேனகா உடன் இருந்தனர்!