குருகிராம்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சொந்த மகளை டெல்லி ஆண் கற்பழிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஆண், தனது 3-வயது மகளை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து காவல்துறை ஆணையர் ஷஸ்மிர் சிங் தெரிவிக்கையில்... சம்பவ நாள் அன்று குற்றம்சாட்டப்பட நபர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தனது ஒருவயது மகளை கையில் எடுத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு அப்பெண்மனி சென்றுள்ளார். எனினும் தனது மூத்த மகளை வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார்.



அன்றைய தினம் சுயநினைவின்றி கிடந்த குற்றவாளி தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.


மறுநாள் காலை வீடுதிரும்பிய அவரது மனைவி படுக்கையில் தனது மகள் சுயநினைவின்றி ரத்த காயங்களுடன் வீழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்த அவர் தனது மகளை டெல்லி சப்தர்சங் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்துள்ளார். தீவிர சிகிச்சை பெற்றுவரும் குழந்தை ஆபத்து நிலையில் இருந்து மீளவில்லை எனவும் சிங் குறிப்பிட்டுள்ளார்.


குற்றம்சாட்டப்பட்ட குழந்தையில் தந்தை மீது POCSO சட்டத்தின் மீது வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் அவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் சிங் தெரிவித்துள்ளார்.