புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்குமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு தினத்தையொட்டி டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களிலும், முக்கிய இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் உஷார் நிலையில் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு விமான பயணிகளும், அவர்களது உடமைகளும் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.


விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.