அபுதாபியில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்ப்பாராத விதமாக விமானம் நிறுத்தம் செய்யும் நேரத்தில் விபத்துக்குள்ளானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விமானத்தில் பயணம் செய்த 102 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக போயிங் 737-800 விமானத்தின் மூக்கு-சக்கரம் சரிந்தது.


இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.39 மணிக்கு நடைபெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.