மதுரை விமானத்தில் இருந்து துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் வாரத்தின் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 4 நாட்கள் டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு இரவு 10.15 மணி வந்து சேர்ந்து மீண்டும் 11.15 மணிக்கு மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்கின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வருகின்ற 27-ம் தேதி முதல் வாரத்தின் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளா கொச்சியிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 


விமானம் மதுரை விமான நிலையத்திற்கு பகல் 11.15 மணிக்கு வரும் விமானம் மீண்டும் மதியம் 12.15 மணிக்கு மதுரை விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூரிலிருக்கு செல்ல உள்ளது.


இதன் மூலம் 27-ம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களுக்கும் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை கிடைக்க உள்ளதால், மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயண ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பயனடைவார்கள்.