இந்தியாவிற்கு அல்கொய்தா மிரட்டல் ‘எங்கள் காஷ்மீர் சகோதரர்களை’ கொன்றவர்களே நீங்கள் தான் எங்கள் அடுத்த குறி என கூறியுள்ளது. மிரட்டல் குறித்து அல் கொய்தா ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர். இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் எங்கள் குறி என ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் எங்கள் காஷ்மீர் சகோதரர்களை கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம் என கூறியுள்ளனர்.


பொதுவாக மற்ற இயக்கங்கள் மக்கள் மீதோ, புனித இடங்களிலோ தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஆனால், மற்ற இயக்கங்களிலிருந்து அல் கொய்தாவின் செயல்பாடுகள் வேறுபட்டிருக்கும்.


அந்த ஆவணத்தில் அல் கொய்தாவின் நோக்கம் மற்றும் உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய கூடாது என்பது பற்றி தெரிவிக்கப் பட்டுள்ளன.


இவ்வாறு அல் கொய்தா ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.