ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் கடந்த 10-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 7 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 


இதைதொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.


பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.