ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினரால் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ரபியாபாத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து ராணுவ படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  


இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படியினர் மீது துப்பாக்கி சண்டை நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கு இடையே நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையின் முடிவில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.    


ஏற்கனவே 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு பயங்கரவாதி தற்போது உயிரிழப்பு!