பொதுவெளியில் அவமான படுத்தியதாக விராத் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா-வுக்கும் நடிகர் அர்ஹான் சிங் வக்கீல் நோட்டீஸ்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் கடந்த 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இவர்கள் இருவரும்  மகிழ்ச்சியாக சுற்றி திரிந்து வந்தனர். பின்னர் விராட் கிரிக்கெட்டிலும் அனுஷ்கா திரைப்படங்களிலும் பிஸியாகி வருகின்றனர். 


இந்நிலையில், சமீபத்தில் அனுஷ்கா சர்மா, காரில் சென்றபோது மற்றொரு காரில் சென்ற ஒருவர் குப்பையை குப்பை தொட்டியில் வீசாமல் சாலையில் வீசுகிறார். இதைக் கண்ட அனுஷ்கா சர்மா, அந்த காரை அருகில் அழைத்து குப்பையை சாலையில் போட்டவரிடம், சாலையில் வீசாதீர்கள், குப்பை தொட்டியில் போடுங்கள் என கண்டிப்புடன் கூறினார்.



இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, தற்போது நடிகர் அர்ஹான் சிங், கோஹ்லி மற்றும் அனுஷ்கா மீது வழக்கு தொடுத்துள்ளார். இருவரும் தன்னை அவமானப்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டும் சம்மன் அனுப்பியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. 



இந்த சம்பவம் குறித்து அர்ஹான் சிங் கூறியபோது; ''என்னை பொதுவில் சமூக வலைதளத்தில் கோஹ்லியும், அனுஷ்காவும் அவமானப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தொடுத்து இருக்கிறேன். இதில் நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும். இப்போதைக்கு இதற்கு மேல் இதில் கருத்து கூற விரும்பவில்லை'' என தெரிவித்துள்ளார்.