காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஹெர்மெய்ன் எனும் பகுதியில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லெப்டினன்ட் பதவியில் இருந்த அந்த அதிகாரி குல்காம் பகுதியைச் சேர்ந்தவர். சோபியானில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், அங்கு அவர் மர்ம முறையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.