அருணாச்சல பிரதேசத்தின் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாச்சல பிரதேசம் மாநில முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். அவர்கள் அருணாச்சல பிரதேசம் மக்கள் கட்சியில் இணைந்துவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஒரேஒரு உறுப்பினர் மட்டுமே உள்ளார், அவர் முன்னாள் முதல்வர் நபம் துகி.


பிமா காண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:- நான் எங்கள் மாநில சட்டசபை சபாநாயகரை சந்தித்து பேசினேன், நான் மற்றும் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அருணாச்சல பிரதேசம் மக்கள் கட்சியுடன் இணைத்துவிட்டோம், என்று கூறியுள்ளார்.