டெல்லியின் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுயுள்ளார், கோல்டன் டெம்பல் என அழைக்கப்படும் சீக்கியர்களின் பொற்கோவில் அமைந்துள்ள அமிர்தசரஸ்க்கு காரில் சென்றார். அப்போது தன் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வந்த இன்னோவா கார் வேகமாக மோதியது. சீட் பெல்ட் அணிருந்து இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 


இச்சம்பவத்திற்கு பிறகு பொற்கோவிலில் தரிசனம் செய்த அவர் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் பொற்கோவிலை சுற்றியுள்ள வட்டாரங்களில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்போம் என்று தெரிவித்தார்.