மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கபர்கெடா நகரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்.-ல் இருந்து ஒருவர் ரூ.500 எடுக்க முயன்றார். ஆனால், ரூ.2,500 ஏடிஎம்-ல் இருந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயன்றபோது மீண்டும் ரூ.2,500 வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஏராளமானோர் திரண்டனர். வங்கி வாடிக்கையாளர்களில் ஒருவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ஏடிஎம்-ஐ மூடினர்.


இதனைத் தொடர்ந்து வங்கிக்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஏடிஎம்-ல்  ரூ.100 நோட்டுகளை வைக்க வேண்டிய தட்டில் ரூ.500 நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் தொடரப்படவில்லை. 


மேலும் படிக்க | நல்ல செய்தி: ஓய்வுபெறும் வயது, பென்ஷன் தொகையில் அதிகரிப்பு, அரசு பரிசீலனை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR