Bizarre Crime News: மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று 31 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார். அவர் மித மிஞ்சிய மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கு தவறான வழி சொல்லி ஆட்டோவில் சுற்ற வைத்ததாக சொல்லப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு வழியாக ஒரு மணிநேரம் பயணத்திற்கு பிறகு மது போதையில் இருந்த பயணி சொன்ன இடத்தில் ஆட்டோ ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டுள்ளார். தொடர்ந்து ஆட்டோவின் பயண செலவாக  250 ரூபாய் ஆனதாக சொல்லி உள்ளார். ஆனால் அந்த மது போதை பயணி தம்மிடம் 100 ரூபாய் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் சில முகங்கள்! பணக்கார காமெடியன்! ஓவியர்


இதனால் இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ள ஒரு கட்டத்தில் அது வாக்குவாதமாக மாறியது.  கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் அந்த பயணியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி 200 ரூபாயை எடுக்க வைத்ததோடு அவரை கடுமையாக தாக்கி செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றையும் பறித்துள்ளார்.


இதனால் பதறிய அந்த பயணி உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து ஓடி உள்ளார். பின்னர் சம்பவம் நடந்த அடுத்த நாளில் தனது செல்போன் உள்ளிட்ட உடமைகள் பறிக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அதனை மெத்தனமாக எடுத்துக் கொண்ட போலீசார் முழுமையான சம்பவத்தை அறிந்தும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து பாலியல் வன்புணர்வு, கொலை முயற்சி, கொள்ளை அடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மது போதையில் இருந்த ஆண் பயணியை ஆட்டோ ஓட்டுநர்  பாலியல் வன்கொடுமை செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இதே மகாராஷ்டிராவில் நடந்த மற்றொரு சம்பவமும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


கடந்த சில வருடங்களாக தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை பல துண்டுகளாக வெட்டிய சம்பவமும் நடந்துள்ளது. பெண்ணின் உடல் பாகங்களை துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக குக்கரில் வேகவைத்தது மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்டவரின் பெயர் சரஸ்வதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயர் மனோஜ் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குற்றத்திற்கான நோக்கத்தை இன்னும் காவலர்கள் தெரிவிக்கவில்லைலை. இந்த கொடூர கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க போலீசார் மனோஜிடம் தீவிரம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. மனோஜ், மரம் அறுக்கும் ரம்பத்தை வாங்கி, சரஸ்வதியின் உடலை வெட்டியுள்ளார் என கூறப்படுகிறது.


அவரின் உடலை 13 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படும் நிலையில், மேலும், 7-8 துண்டுகளை துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக குக்கரில் வேகவைத்திருக்கலாம் என்றும், அதனை தெருநாய்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் அந்த குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். 


"சரஸ்வதி கொல்லப்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் விசாரணையில் உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் எங்களிடம் அளிக்க பொதுமக்கள் முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று மும்பை துணை காவல் ஆணையர் பஜ்பலே கூறினார்.


மேலும் படிக்க | ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ