பந்திப்போரா கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை பந்திப்போரா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.


தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. மேலும் பயங்கரவாதிகள் இருக்ககூடும் என்ற சந்தேகத்தால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.