பரோடா மனிப்பால் பள்ளியில் வங்கி மற்றும் நிதிப் படிப்புகளில் சான்றிதழ் பட்டிப்பு பயில்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாங் ஆப் பரோடா வங்கியின், வங்கி தொடர்பாக படிப்புகளை வழங்கிவரும் பரோடா மனிப்பால் பள்ளியில்ல வங்கி மற்றும் நிதி துறைகளுக்கான சான்றிதழ் படிப்பு துவங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bankofbaroda.com இல் பெறலாம் என பாங் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.


வங்கியின் அறிவிப்பின் படி, பரோடா மானிப்பல் ஸ்கூல் ஆப் பாங்கிங் ஆனது இந்த சான்றிதழ் படிப்பிற்கு 600 மாணவர்களை தேர்ந்தெடுக்கும் என தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின் காலம் 2018-19 (ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை)  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஒன்பது மாத பயிற்சிக்கு பின்னர், மாணவர்கள் வங்கி மற்றும் நிதிகளில் பிந்தைய பட்ட படிப்பு சான்றிதழை பெருவதோடு, வங்கியில் ஜூனியர் மேனேஜ்மெண்ட் கிரேடு / ஸ்கேல் -1 அதிகாரியாக நியமிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படிப்பிற்கான அனுமதி சீட்டை பெறுவது எப்படி...


1) வங்கி வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு bankofbaroda.com செல்ல வேண்டும்.


2) திரைவரும் பக்கத்தில் careers என்னும் தாவலை தேர்ந்தெடுக்க வேண்டும்.


3) பின்னர், current opportunities என்னும் இணைப்பை கிளிக் செய்யலாம்.


4) இதைத் தொடர்ந்து, அடுத்த பக்கத்தில் வரும் "Download Call letter for Online Exam on 28.07.2018 External website that opens in a new window” என்னும் இணைப்பினை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மற்றொரு திரை திறக்கப்படும்.


5) இந்த திரையில் வேட்பாளர்கள் வேண்டிய விவரங்களை உள்ளீடல் வேண்டும்.


6) இந்த செயல்முறை முடிவடைந்த பின்னர், வேட்பாளர்கள் தங்கள் ஒப்புதல் அட்டையினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.


ஆன்லைன் தேர்வு (குறிக்கோள் மற்றும் விரிவானது) கொண்டிருக்கும் ஒரு தேர்வு செயல்முறை மூலம் வங்கி தேர்வு செய்யப்படும். இது தொடர்ந்து சைக்கோமெட்ரிக் மதிப்பீடு, குழு கலந்துரையாடல் மற்றும் பேட்டி. பாடநெறிக்கான சேர்க்கை வங்கியியல் வங்கியின் மானிப்பல் பள்ளியில் நடக்கிறது.