டீலர் கமிஷன் உயர்வதால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.55 ரூபாயும் டீசல் ஒரு லிட்டருக்கு 1.65 ரூபாயும் என டீலர் கமிஷன் தரப்படுகிறது. இதனை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1 ரூபாயும் டீசல் ஒரு லிட்டருக்கு 0.72 காசுகளும் உயர்த்த வேண்டும் என பெட்ரோல் பங்க் டீலர்கள் கோரிக்கை விடுத்தனர். 


இதன்படி, டீலர் கமிஷனை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.