புதுடெல்லி: ரயில்வே பயணிகளுக்கு ஒரு துற்செய்தி. இனி மேற்கு மண்டல ரயிலவேவில் பயணிக்கும் பயணிகளுக்கு இரவில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட் வசதி கிடைக்காது. காலை 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் இடத்தில் மின்சாரம் மூடப்படும். இத்தகைய சூழ்நிலையில், பயணிகள் தங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியை இரவில் சார்ஜ் செய்ய முடியாது. ரயில்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வேயின் (Indian Railway) மேற்கு மண்டலம் இந்த முடிவை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீ சம்பவங்கள் குறைவாக இருக்கும்
இந்த முடிவால் கோடிக்கணக்கான ரயில் பயணிகள் (Railway Passsenger) பாதிக்கப்படுவார்கள். இந்த புதிய விதிப்படி, இரவில் பயணத்தின் போது மொபைல் திருட்டு சம்பவங்கள் கூறவிய வாய்ப்பு உள்ளது. மேலும், அதிக சார்ஜிங் செய்யப்படுவதால், மொபைல் வெடிப்புக்கான வாய்ப்பும் தீர்வுக்கு வரும்.


சாக்கெட் சார்ஜ் செய்வதால் ரயிலில் தீ!
கடந்த மார்ச் 13 ஆம் தேதி டெல்லி-டெஹ்ராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென 7 கோசில் பரவியது. அதிர்ஷ்டவசமாக, இந்த தீ விபத்தில் எந்த பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரயில்வே (Indian Railways) ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது, அதில் சார்ஜிங் (Mobile Charging) சாக்கெட் காரணமாக ரயில்வே பெட்டிகளில் தீ ஏற்படும் என்று தெரியவந்தது.


ALSO READ: அதிர்ச்சி! இப்போது இதன் விலையும் உயர்ந்தன, விலை உயர்வால் அவிதிபடும் நடுத்தர மக்கள்!


ஆலோசனை 2014 இல் வெளியிடப்பட்டது
தீ விபத்துக்குப் பிறகு, மேற்கு மண்டலம் 2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்றும் என்று கூறியுள்ளது. உண்மையில், ரயில்வே 2014 ஆம் ஆண்டில் அனைத்து மண்டலங்களுக்கும் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயணிகளிடம் மொபைல் சார்ஜிங் செய்ய வேண்டாம் என்று ஒரு ஆலோசனையை வெளியிட்டது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR