அதிர்ச்சி! இப்போது இதன் விலையும் உயர்ந்தன, விலை உயர்வால் அவிதிபடும் நடுத்தர மக்கள்!

Indian railways: பணவீக்கத்தின் மற்றொரு அடியைத் தாங்கத் தயாராகுங்கள். பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் (Platform Tickets) விலையை இந்திய ரயில்வே 5 மடங்கு உயர்த்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2021, 04:38 PM IST
அதிர்ச்சி! இப்போது இதன் விலையும் உயர்ந்தன, விலை உயர்வால் அவிதிபடும் நடுத்தர மக்கள்! title=

மும்பை: Indian railways: பணவீக்கத்தின் மற்றொரு அடியை அனுபவிக்க தயாராகுங்கள். பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் (Platform Tickets) விலையை இந்திய ரயில்வே 5 மடங்கு உயர்த்தியுள்ளது. நீங்கள் இப்போது வரை பயன்படுத்திய பிளாட்ஃபார்ம் டிக்கெட் ரூ .10 க்கு இருந்தது. தற்போது நீங்கள் இதற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரவிருக்கும் கோடையில், ரயில்வே பயணிகளின் பெரும் கூட்டம் நிலையங்களுக்கு திரும்பும் என்று ரயில்வே உணர்கிறது. கொரோனா வைரஸ் (Coronavirus Pandemic) தொற்றுநோய் பரவுவதற்கான பயம் இருப்பதால் ரயில்வே அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் ஜூன் 15 வரை விலை உயர்ந்ததாக இருக்கும்
மத்திய ரயில்வே (Central Railway) மும்பை பெருநகர பிராந்தியத்தின் (MMR) முக்கிய நிலையங்களின் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை 5 மடங்கு அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்குப் பின்னால், கொரோனா தொற்றுநோய்க்கு (Coronavirus) மத்தியில் நிலையங்களில் அதிக மக்கள் கூட்டம் வர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பிளாட்ஃபார்ம் இல் டிக்கெட்டுகளின் புதிய கட்டணங்கள் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்து ஜூன் 15 வரை இருக்கும்.

ALSO READ | India Corona Updates: நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது

இந்த நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் விலை உயர்வு 
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT), தாதர் மற்றும் லோக்மண்ய திலக் டர்னிமஸ் மற்றும் தானே, கல்யாண், பன்வேல் மற்றும் பிவாண்டி சாலை நிலையங்களில் மத்திய ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை ரூ .10 முதல் ரூ .50 ஆக உயர்த்தியுள்ளது. வழக்கமாக பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் நிலையங்கள் இவை. முன்னதாக 2020 மார்ச்சில், கொரோனா வைரஸைத் (Coronavirus Pandemic) தவிர்ப்பதற்காக, இந்திய ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை அதிகரிக்க முடிவு செய்திருந்தது. மும்பை, புனே, பூசாவல் மற்றும் சோலாப்பூர் பிரிவுகளில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலையை மத்திய ரயில்வே ரூ .10 முதல் ரூ .50 ஆக உயர்த்தியது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
உண்மையில், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து, மும்பையில் கொரோனா தொற்றுக்கள் விரைவாக அதிகரித்து வருகின்றன. மும்பையில் இதுவரை 3.25 லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், 11400 பேரும் இறந்துள்ளனர்.

ALSO READ | உலகளவில் தடுப்பூசி பணியில் முதலிடத்தில் இந்தியா; 19 நாட்களில் 45 லட்சம் தடுப்பூசி ..!!!

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News