டெல்லி: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) செவ்வாயன்று கோவிட் -19-ஆல் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கான நிதி உதவிகள் பற்றி அறிவித்ததாக ஏ.என்.ஐ அறிக்கை தெரிவித்துள்ளது.


50,000 ரூபாய் தவிர, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வருமானம் ஈட்டும் நபரை இழந்த குடும்பங்களுக்கு மாத ஓய்வூதியமாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் அறிவித்தார். 


"கொரோனா தொற்றால் கணவர் இறந்தால், ஓய்வூதியம் மனைவிக்கு வழங்கப்படும். மனைவி இறந்தால் அது கணவருக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இறந்தால், அவருடைய பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று கெஜ்ரிவால் கூறியதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ கூறியது. 


கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மேலும் நிவாரணமாக, கெஜ்ரிவால், "கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக தாய், தந்தை இருவரும் இறந்தாலோ, அல்லது, பெற்றோரில் ஒருவர் முன்னரே இறந்திருந்து, மற்றொருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்தாலோ, அந்த குழந்தைகளுக்கு 2,500 ரூபாய் மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். குழந்தைகள் 25 வயதை எட்டும் வரை இந்த நிதி உதவி அளிக்கப்படும்" என்று கூறினார். 


கோவிட் -19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தில்லி அரசு இலவச கல்வியை வழங்கும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


ALSO READ: COVID தொற்றுநோயால் சிதைந்து போன குடும்பங்கள், குழந்தைகளுக்கு டெல்லி முதல்வரின் மிகப்பெரிய நிவாரணம்


முன்னதாக, பெருந்தொற்றால் (Pandemic) பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்புக்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என டெல்லி முதல்வர் கூறியிருந்தார். 


இது தொடர்பாக பேசுகையில், "பெற்றோர் இருவரையும் தொற்றுக்கு இழந்துவிட்ட பல குழந்தைகளை நான் அறிவேன். உங்களுக்காக நான் இன்னும் இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்களை நீங்கள் அனாதையாக கருத வேண்டாம். அத்தகைய குழந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ப்பை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும்" என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார். 


"தங்கள் குழந்தைகளை இழந்த வயதானவர்களைப் பற்றியும் நான் நான் அறிவேன். இறந்தவர்களின் சம்பாத்தியத்தை நம்பி தான் இந்த குடும்பங்கள் இருந்துள்ளன. உங்களுடைய மகன் (கெஜ்ரிவால்) இன்னும் உயிரோடு இருக்கிறேன் என நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களை இழந்த இதுபோன்ற அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கம் உதவும்" என்று முன்னர் டெல்லி முதல்வர் கூறியிருந்தார். 


ALSO READ: 2 மாதங்களுக்கு இலவச ரேஷன்-டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்: Lockdown நீடிக்குமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR