பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தாய், மகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பருவமழை காரணமாக் பீகார் மற்றும் அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பலபேர் தங்கள் வீடு, வாசல்களை இழந்து உள்ளனர். இந்நிலையில், பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பழுதடைந்துள்ள சாலையை பொதுமக்கள் கடந்து சென்றனர். அப்பொழுது தாய் மற்றும் அவளது மகள்,  ஆணின் உதவியுடன், அந்த சலைய கடந்த செல்லும் போது எதிர்பாரத விதமாக சாலை உடைந்தால் தாயும், அவளது மகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் இந்த ஆண் சாலையின் மறுபக்கம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


அங்கிருந்த மக்கள் அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை காப்பாற்றாமல் நின்று வேடிக்கை பார்கின்றனர்.


தற்போது இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியை அடைய வைத்துள்ளது.