இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா வந்துள்ள அவர், வெள்ளிக்கிழமை, அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார், இதில் பயங்கரவாதம் முதல் வர்த்தகம் வரையிலான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா பயங்கரவாதத்தை ஒவ்வொரு வடிவத்திலும் எதிர்க்கிறது, அதற்கு எதிரான நமது போர் தொடரும், இந்த போராட்டத்தில் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என தெரிவித்துள்ளார்.



கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது., 'தேர்தல்களில் தீர்க்கமான வெற்றியைப் பெற்ற ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை நான் வாழ்த்துகிறேன், இலங்கையில் ஜனநாயகத்தின் வலிமையும் முதிர்ச்சியும் பெருமைக்குரியது. ஜனாதிபதி ராஜபக்ஷ தனது முதல் வருகைக்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்கு ஒரு மரியாதை, இது இந்தியா-இலங்கையின் நட்பின் சான்று. 'இரு நாடுகளின் முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக இந்தியா இலங்கையுடன் நிற்கிறது. ஒரு நிலையான, பாதுகாப்பான இலங்கை - இந்தியா மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்தின் நலனுக்காகவும் உள்ளது. இந்தியா-இலங்கை அருகிலுள்ள கடல் அண்டை நாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு வரலாற்று அடிப்படையாகும்.
 
இந்த நேரத்தில் எங்கள் அரசாங்கத்தின் 'Neighbor First' கொள்கையின் கீழ், இலங்கையுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில்., ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் எனக்கும் இடையே இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக கூட்டாட்சியை நாங்கள் பலப்படுத்துவோம் என்று முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.