ராஞ்சி-யின் லாஹோர்தகா பகதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் பலியானவர் பெயர் பங்கஜ் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கி தோட்டா அவரது தலையில் பாய்ந்ததில் அவர் மரணித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இன்று காலை சுமார் 8.30 மணியளவில் இச்சம்பவம், பிஸ்கா ரயில்வே நிலையம் அருகில் உள்ள ராம்லால் இனிப்பகத்திற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.


இச்சம்பவத்தினை அடுத்து உள்ளூர் பாஜக தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர் எனவும், அவர்களது அங்க அடையாளம் குறித்து பொதுமக்களிடம் விசாரித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்ட விசாரணையில், குப்தா அவர்கள் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தினை பார்க் அடிக்கடி வருவது வழக்கம் எனவும், இதனால் கொலையாளிகள் திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.


கொலையாளிகளை விரைவில் பிடிக்கவேண்டும் எனவும், இச்சம்பவம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுத்து கொலையாளிகளை பிடிக்கவேண்டும் எனவும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது!