மக்களவை சபாநாயகராக பாஜக MP ஓம் பிரகாஷ் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக பாஜக MP ஓம் பிரகாஷ் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஓம் பிரகாஷ் பெயர் அறிவிக்கப்பட்டால் அவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் ஐயம் இல்லை.


நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பூண்டி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது ஓம் பிரகாஷ் குறித்து வெளியாகும் தகவல்கள் குறித்து பாஜக தலைவர்களிடன் கேள்வி எழுப்பியதற்கு இதுவரை முறையான அறிவிப்புகள் வெளியாகவில்லை எனவும், ஓம் பிரகாஷ் பரிந்துரையை உறுதிபடுத்த இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக செயல் தலைவர் JP நட்டாவின் குடியிறுப்பிற்கு ஓம் பிரகாஷ் வருகை புரிந்தது ஊடகங்களின் சந்தேகங்களை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நட்டாவின் குடியிறுப்பில் இருந்நு வெளிவந்த ஓம் பிரகாஷிடன் சேய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., ‘தனக்கே இந்த தகவல்கள் குறித்து தெரியாது எனவும், பாஜக-வின் காரியகர்தாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாகவும்’ தெரிவித்தார்.


முன்னதாக இதுகுறித்து ஓம் பிரகாஷ் மனைவி அமித்தா பிர்லா-விடன் இதுகுறித்து வினவுகையில்., தனது கனவர் மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்சியடைவேன் எனவும், தனது குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்குவர் எனவும் தெரிவித்துள்ளார்.


மக்களவை சபாநாயகரா ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அவர்களின் இடத்தை நிறப்புவார் என்பது குறிப்பிடத்தக்கது. 16-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த சுமித்ரா மஹாஜன் 8 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த தேர்தலின் போது 75-வயது ஆகும் சுமித்ரா மகாஜனுக்கு பாஜக தலைமையில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்குப்பட்ட நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் சுமித்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.