திருவனந்தபுரம்: பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அக்கட்சியினர் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்துள்ள கொக்குலங்கரா கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த நிர்மல், தாமஸ் ஆகியோர் நேற்று இரவு விழாவிற்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இவர் இருவர் மீதும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். 


அந்த சம்பவத்திற்கு கேரள மாநில பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த கொடூர கொலை சம்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் திருச்சூர் மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பிற்கு பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.