EPFO on Paytm Payments Bank: கடந்த சில நாட்களாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு விதித்த தடைகளைத் தொடர்ந்து அந்த வங்கிக்கு அடுத்தடுத்து பல வித இன்னல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.  Paytm Payments வங்கி வாடிக்கையாளர்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர். இதற்கிடையில் இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப்ஓ போட்ட உத்தரவு:


Paytm Payments வங்கி கணக்கு மூலம் தங்கள் தொகையை க்ளெய்ம் செய்யும் இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர்கள் (EPFO Subscribers) பெரும் அதிர்ச்சியைப் பெறவுள்ளனர். பிப்ரவரி 23, 2024 முதல், Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளைக் கொண்ட சந்தாதாரர்களின் க்ளெய்ம்களை ஏற்க வேண்டாம் என தனது கள அதிகாரிகளுக்கு இபிஎஃப்ஓ உத்தரவிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இதற்கான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.  


Paytm Payments வங்கியில் இபிஎஃப் க்ளெய்ம்களை செட்டில் செய்ய தடை


EPFO 8 பிப்ரவரி 2024 அன்று அனைத்து கள அலுவலகங்களுக்கும் இது குறித்த ​​ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில், “பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) ஆகிய வங்கிகளின் வங்கிக் கணக்குகளிலும் (Bank Account) EPF க்ளெய்ம்களை செலுத்துவதற்கு வங்கிப் பிரிவு 1 நவம்பர் 2023 அன்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜனவரி 31, 2024 அன்று, பிப்ரவரி 29, 2024 முதல் Paytm Payments Bank வாடிக்கையாளர்களின் கணக்குகளில் கடன் அல்லது டெபாசிட் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.” என்று இபிஎஃப்ஓ குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | Business Idea: இட்லி, தோசை மாவு தொழில் மூலம் இவ்வளவு லாபம் பார்க்கலாமா?


“இப்படிப்பட்ட சூழ்நிலையில், 23 பிப்ரவரி 2024 முதல் Paytm Payments வங்கியின் வங்கிக் கணக்கில் EPF க்ளெய்ம்களை (EPF Claims) செட்டில் செய்வதற்கு EPFO ​​அனைத்து கள அலுவலகங்களுக்கும் தடை விதிக்கிறது” என இந்த சுற்றறிக்கையில் இபிஎஃப்ஓ மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துமாறும் கள அலுவலகங்களை EPFO ​​கேட்டுக் கொண்டுள்ளது.


ரிசர்வ வங்கியின் தடை: நடந்தது என்ன? 


ஜனவரி 31, 2024 அன்று, Paytm Payments வங்கிக்கு எதிராக ஆர்பிஐ (RBI) பெரிய நடவடிக்கையை எடுத்தது. இதன் மூலம் வங்கி பெரும் பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாமல், வங்கி வாடிக்கையாளர்களும் பல பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆர்பிஐ புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் வங்கிக்கு தடை விதித்தது. Paytm Payments வங்கி ஒழுங்குமுறை விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரிசர்வ வங்கி குற்றம் சாட்டியுள்ளது. 


பரிவர்த்தனைகளுக்கு தடை


பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் பேடிஎம் வாலட் ( Paytm Wallet) இல் பணத்தை டெபாசிட் செய்யவோ, கிரெடிட் பரிவர்த்தனைகளைச் செய்யவோ தடை உள்ளது. பேடிஎம் வாடிக்கையாளர்கள் (Paytm Customers) தங்கள் வாலட்டில் இருப்பில் உள்ள தொகை தீர்ந்து போகும் வரை அதை பயன்படுத்தலாம். பேடிஎம் வாடிக்கையாளர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாள்வதற்கு பல வழிமுறைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இன்னும் இதில் ஒரு தெளிவு கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்களிடம் பல கேள்விகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த முழு விவகாரம் குறித்த ஒரு விளக்கத்தை அளித்து, வாடிக்கையாளர்களின் குழப்பத்தை நீக்க, ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்களை’ (Frequently Asked Questions) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க | 750 ரூபாய் கேஷ்பேக் சலுகைகளை வழங்கும்BHIM App! எப்படி க்ளைம் செய்வது? யாருக்கு கிடையாது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ