சிலிகுரியில் உள்ள பாஜக பூத் அலுவலகத்தில் நபர் ஒருவர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. அந்தவகையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று சிலிகுரியில் பிரசாரம் மேற்கொண்டார். 


இந்நிலையில், சிலிகுரியில் உள்ள பாஜக பூத் அலுவலகத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கிக்கிடந்தார். தற்போது இதுகுறித்து இன்று அதிகாலை அந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தூக்கில் தொங்கிய சடலத்தை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.