நேற்று திங்களன்று மும்பையில், 14 வயதான மன்ர்பீட் சஹான்ஸ், 'நீல திமிங்கில சவாலினால் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் உறுதி செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னணி நாளிதழான இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மன்ர்பீட் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இணையத்தளத்தில் மொட்டை மாடியில் இருந்து குதித்ததற்கான வழிகளை தேடிக்கொண்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை தனது பள்ளியை விட்டு வெளியேறும்போது, இறந்த மன்ர்பீட் தனது நண்பர்களிடம் திங்களன்று தான் பள்ளிக்கு வரபோவதில்லை என்று தெரிவித்திருந்தார்.


அந்த சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்பு, சிறுவனின் நடத்தை முழுமையாக மாறிவிட்டது எனவும் கூறப்படுகிறது. அவரது பெற்றோர்களுக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது, இருபினும் இத்தகுக தீவிர நடவடிக்கை எடுப்பார் எனவும் அவரது வாழ்க்கையை முடித்துக்கொள்வார் எனவும் கருதவில்லை. அவரது பெற்றோர்களுக்கு இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.


தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாக ஒரு படத்தை எடுத்துள்ளார், அப்படத்தில் சிறுவனின் கால்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.


மும்பை காவல்துறையானது மும்பையில் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளை கவனித்து அவர்களின் நடத்தை மீது ஒரு தாவலை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுகொண்டது.


நீல திமிங்கல விளையாட்டு என்றால் என்ன?


ஆபத்தான நீல திமிங்கலம் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்டமனது மரணத்தில் முடிவடையும். போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.


இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது. எனினும், மும்பை ஆந்தேரியில் நடந்த இந்த தற்கொலை இந்தியாவில் முதல் நிகழ்வு ஆகும்.