குஜராத் முதலமைச்சர் திடீர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்பாராத நடவடிக்கையாக, விஜய் ரூபானி இன்று குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 11, 2021) குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக பேசிய அவர், தனக்கு முதல்வராக வாய்ப்பு கொடுத்த பாஜக தலைமைக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.



அடுத்த முத்லமைச்சராக யார் நியமிக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.  ராஜ்பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் ரூபானி அவர், தான் குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை உறுதி செய்தார்.


அனைத்து கட்சி ஊழியர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் "பாஜகவின் பாரம்பரியத்திற்கு" ஏற்ப ராஜினாமா செய்வதாக ரூபானி தெரிவித்தார்.


Also Read | மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது சமூக பண்பல்ல: சந்தானத்திற்கு கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR