பெங்களூரு: மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, கன்னட நடிகர் புனீத்ராஜ்குமார் இன்று காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது எதுவும் கூற முடியாது. மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு, தற்போது ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெங்களூரு விக்ரம் மருத்துவமனை (Vikram hospital in Bengaluru) டாக்டர் ரங்கநாத் நாயக் தெரிவித்திருந்தார்.


கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் தான் புனித் ராஜ்குமார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. புனீத்ராஜ்குமார் மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியை அறிந்து, மருத்துவமனைக்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மருத்துவமனை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு மாநகர கமிஷனரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR