பரேலி: உபி., மாநிலம், பரேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, பரேலி நகரின் கண்டோன்மன்ட் பகுதியில் திருமணத்துக்கு முன்நாள் இரவு மணப்பெண் முகத்தில் ஆசிட் வீச்சப்பற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணமகள் தனது பாட்டியுடன் அறையில் தனியாக அமர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்னின் முகத்தில் இரு பெண்கள் ஆசிட்டை ஊற்றினார்.


வேதனையால் அந்த இளம்பெண் கூச்சலிட தொடங்கியதும் அறையின் வெளிக்கதவை தாளிட்டுவிட்டு, இரு பெண்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். முகத்தில் ஏற்பட்ட தீக்காயங்களுடன் இன்று மணக்கோலம் காணவேண்டிய அந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.