கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக பிரமுகருமான பிஎஸ் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 வயதான சௌந்தர்யா, பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர் தனது கணவருடனும், ஆறு மாத குழந்தையுடன் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு உயர்மட்ட குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது கணவரும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சௌந்தர்யாவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.




வெள்ளிக்கிழமை காலை அவர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். இறப்புக்கான காரணத்தை அறிய அவரது உடல் இப்போது  உடற்கூராய்வுக்காக அரசு நடத்தும் பௌரிங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 


சௌந்தர்யா எடியூரப்பாவின் முதல் மகள் பத்மாவின் மகளாவார். 


இந்த செய்தி அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வரான பிஎஸ் எடியூரப்பாவுக்கு ஆறுதல் சொல்ல, தனது அமைச்சரவை சகாக்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR