கர்நாடக சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக சட்டசபையின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப தேசிய மற்றும் பிராந்திய தனியார் தொலைக்காட்சி சேனல்களை தடை செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், தனது அறிவிப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே ககேரியை கேட்டுக்கொள்வதாக கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியுரப்பா தெரிவித்துள்ளார்,


இதுகுறித்து கர்நாடக முதல்வர் ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில்., “எனது அரசாங்கம் எப்போதும் ஊடக சுதந்திரத்தில் உறுதியாக உள்ளது. சபை நடவடிக்கைகளை ஒளிபரப்பவிடாமல் ஊடகங்களைத் தடுப்பது குறித்த தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் நேர்மையான முயற்சியை மேற்கொள்வேன், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்தே ககேரியிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இன்று வியாழக்கிழமை முதல் சட்டமன்றத்தின் மூன்று நாள் குளிர்கால அமர்வு துவங்கிய நிலையில், கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஹெக்டே ககேரி புதன்கிழமை கேமரா நபர்களை, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள், அமர்வின் நடவடிக்கைகளை பதிவுசெய்வதை தடைசெய்தார்.


எனினும் "தூர்தர்ஷனின் கன்னட சேனல் சந்தனா, சட்டமன்ற நடவடிக்கைகளின் வீடியோ ஊட்டத்தை தனியார் செய்தி சேனல்களுக்கு வழங்கும்" என்று சபாநாயகர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


"சபாநாயகர் தீர்மானித்தபடி, தனியார் செய்தி சேனல்கள் தூர்தர்ஷனிடமிருந்து பாராளுமன்ற விஷயத்தைப் போலவே நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பலாம்" என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், தொலைக்காட்சி செய்தி நிருபர்கள், அச்சு மற்றும் பிற ஊடக ஊடகவியலாளர்கள் போல் சபையின் நிகழ்வுகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கேமராக்களை உள்ளே கொண்டு செல்ல முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏவும், முன்னாள் சபாநாயகருமான கே.ஆர். ரமேஷ் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில்.,  தனியார் தொலைக்காட்சி சேனல்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து கடந்த இரண்டு தசாப்தங்களாக நடவடிக்கைகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டன. அவர்கள் காட்சிக்கு வரும் வரை, தூர்ஷன் மட்டுமே அமர்வுகளை பதிவுசெய்த சேனல்.


"1990-களின் நடுப்பகுதியில் நான் சபாநாயகராக இருந்தபோது ஒரு சில தனியார் செய்தி சேனல்களை அவர்களின் பார்வையாளர்களுக்காக நேரடியாக ஒளிபரப்ப அல்லது பதிவு செய்ய அனுமதித்தேன்" என்று குமார் நினைவு கூர்ந்தார்.


ககேரியின் முடிவை ஜனநாயக விரோதம் என்று கூறிய குமார், தனியார் ஒளிபரப்பாளர்கள் பரந்த பார்வையாளர்களுக்கான நடவடிக்கைகளையும், சட்டமன்ற உறுப்பினர்களை அதிக அளவில் அணுகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் "விழிப்புணர்வு என்பது ஜனநாயகத்தின் விலை. சட்டசபை அல்லது சபைக்குள் என்ன நடக்கிறது என்பதை, எங்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அறிய உரிமை உண்டு" என்றும் அவர் குறிப்பிட்டார்.


சட்டமன்றம் மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பவோ அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஒளிபரப்பிற்காக பதிவுசெய்யவோ தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல.


தற்போதைய துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவாடி, அமர்வின் போது தனது மொபைல் போனில் ஆபாச திரைப்படம் பார்த்ததாகக் கூறப்படும் காட்சி கேமராவில் சிக்கியதை அடுத்து, இதேபோன்ற தடை 2012-ல் பாஜக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்-மதச்சார்பற்ற எதிர்ப்புகளின் பின்னர் இந்த தடை விலக்கப்பட்டது.