அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாதில் நேற்று வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ 13,860 கோடி வெளிப்படுத்திய தொழிலதிபர் காணவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ஒருவர் கணக்கில் வராத ரூ.13,860 கோடி ரூபாய் கருப்புப் பணம் வைத்திருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார்


ஐடிஎஸ் திட்டத்தில் சமர்ப்பித்த சொத்துகள், வருவாய்க்கு 30 சதவீத வரி, அபராத வரி உட்பட மொத்தம் 45 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்தத் தொகையை 4 தவணைகளில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி அகமதாபாத் தொழிலதிபர் மகேஷ் ஷா தாக்கல் செய்த சொத்துகளுக்கு முதல் தவணை யாக ரூ.1,500 கோடியை அவர் செலுத்த வேண்டும். இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் அவர் வரியை செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டார்.


இந்நிலையில் மகேஷ் ஷாவின் அகமதாபாத் வீடு மற்றும் அலுவல கங்களில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தியுள்ளனர். அவரின் ஆடிட்டர் சேத்னாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


மகேஷ் ஷா தானாகவே முன் வந்து ரூ.13,860 கோடிக்கான சொத்து விவரங்களை தாக்கல் செய்தார். அவரது தகவல்கள் உண்மைதானா என்பது இப்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


கடந்த 29, 30, 1-ம் தேதிகளில் மகேஷ் ஷாவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ 13,860 கோடி ரூபாய் கருப்பு பணம் சிக்கியது. இந்த பணத்திற்கு உண்மையாக இவர்  ரூ.4500 கோடி வரி கட்டி இருக்க வேண்டும். இந்நிலையில் நேற்று இந்த சோதனையில் பிடிபட்ட தொழிலதிபர் மாயமாகியுள்ளர்.