பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.


ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 


> பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான்.


> மின்சாரத்துறை இணையமைச்சராக இருந்த பியூஸ்கோயல்.


> தமிழகத்தை சேர்ந்த வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.


> பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி 


ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
 
* கேரளாவை சேர்த்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணந்தனம் ஜே. அல்போன்ஸ் அமைச்சராக பதவி ஏற்றார்.


* சத்யா பால் சிங் அவர்கள் அமைச்சராக பதவி ஏற்றார்.


* கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சராக பதவியேற்றார்.


* ஹர்தீப் சிங் பூரி அமைச்சராக பதவி ஏற்றார்.


* ராஜ் குமார் சிங் பதவி ஏற்றார்.


* அனந்தகுமார் ஹெகடே அமைச்சராக பதவி ஏற்றார்.


* விரேந்திர குமார் அமைச்சராக பதவி ஏற்றார்


* அஸ்வினி குமார் சௌபே அமைச்சர் பதவியேற்பார்


* ஷிவ் பிரதாப் சுக்லா பதவி ஏற்றார் 


* மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதவி ஏற்றார்


* நிர்மலா சீதாராமன் கேபினட் பதவிக்கு உயர்த்தப்பட்டார், உறுதிமொழி எடுத்துள்ளார்.


* மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றார்


* தர்மேந்திர பிரதான் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.


இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பரிமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.