சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் ரக்‌ஷா கோபால், நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர். 


ரக்‌ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.


 



 


2-ம் இடத்தை 99.4% மதிப்பெண்களுடன் சண்டிகரில் உள்ள டி.ஏ.வி பள்ளி மாணவி பூமி சாவண்ட் பிடித்துள்ளார்.


3-ம் இடத்தை 99.2% மதிப்பெண்களுடன் சண்டிகரிலுள்ள பவன் வித்யாலயா பள்ளியில் படித்த மன்னட் லத்ரா பிடித்துள்ளார்.


மொத்தமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 82% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 83.05 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.