சூரத் மாவட்டத்தில் திண்டுலி மெயின் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அந்த ரோட்டில் அமைந்துள்ள கைலாஷ் ரெசிடென்ஸி எனும் தள்ளுவண்டியில் வேலைபார்த்த வந்த மூன்று இளைஞர்கள் மின்கசிவு காரணமாக காலமானார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஞாயிற்றுக்கிழமை இரவு, வேலை முடிந்து, தள்ளுவண்டியை தண்ணீர் குழாய் மூலம் சுத்தம் செய்து விட்டு, தள்ளுவண்டியை ஓரமாக நிறுத்தி வைப்பதற்காக 5 அல்லது 6 பேர் தள்ளுகிறார்கள். திடிரென 3 பேர் அப்படியே சரிந்து விழுகிறார்கள். அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களை எழுப்புகிறார்கள். ஆனால் அந்த மூன்று பெரும் எழவில்லை. 



அடுத்த 30 வினாடிகளுக்குள் மூன்று பெரும் இறந்துவிட்டார்கள். இளைஞர்களின் மரணம் அவர்களின் குடும்பங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், அங்கு வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது. 



இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.