தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் உள்ள மத்திய அரசு, மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரெப்ரெஜிரண்ட் ஏ.சி. இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு புறம் சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறுபுறம் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக,  மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுவும் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கிலான முடிவாகும், இதனால் உள்நாட்டு உற்பத்தியில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டு, பொருளாதாரம் வலுப்பெறும்.


வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'குளிரூட்டிகள் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.


உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 


ALSO READ | கொரோனா பரிசோதனையில் இந்தியாவின் 'FELUDA' ஒரு Game Changer ஆக இருக்குமா..!!!


முன்னதாக ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. முன்னதாக, தொலைக்காட்சியில் முதல் பாதுகாப்பு உபகரணங்களுக்கு இறக்குமதி செய்யவும் அரசாங்கம் தடை விதித்திருந்தது.


இந்தியாவுக்கான ஏர் கண்டிஷனர் (ஏசி) ஏற்றுமதி நாடுகளில் முக்கிய நாடுகள் சீனாவும் தாய்லாந்தும் உள்ளன. அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் 90 சதவீத பொருட்கள் இந்த இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.


ALSO READ IRCTC: ரயில் பயணத்தில் இந்த தவறுகள் செய்தால், கம்பி எண்ண வேண்டியிருக்கும்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe