புதுடில்லி: உங்கள் மின்சார கட்டணம் வரும் நாட்களில் குறைக்கப்படலாம். மின்சார யூனிட் வீதத்தைக் குறைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் மின்சார கட்டணத்தை எவ்வாறு குறைக்க முடியும்? என பதில் அளிக்க கோரியுள்ளது. அதாவது உங்கள் மின்சார கட்டணம் எவ்வளவு வந்தாலும், அதை எப்படி குறைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதால் மின்சார நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைகின்றன என்பதே இதற்குக் காரணம். மேலும் மின்சாரத்துக்கான கட்டணம் முன்னதாகவே பெறப்பட்டு வருவதால், வேலை செலவு குறைந்து வருகிறது. 


நாட்டில் 25 கோடி மின்சார மீட்டர் நுகர்வோர் உள்ளனர், அவர்களில் 1 மில்லியன் மக்கள் ஸ்மார்ட் மீட்டரை எட்டியுள்ளனர். இதனால் நிறுவனங்கள் பயனடைகின்றன என்பதை இந்த ஒரு மில்லியன் மக்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


இதைக் கருத்தில் கொண்டு, மின்சார கட்டணத்தை குறைக்க மத்திய மின் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. ஜீ மீடியாவிடமும் (ZEE MEDIA) அந்தக் கடிதம் உள்ளது.


இதுக்குறித்து எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (Energy Efficiency Services Ltd - EESL) நிர்வாக இயக்குனர் சவுரப் குமார் கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர் காரணமாக, நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மீட்டருக்கு 200 டாலர் பயனடைகின்றன. இதனால் நிறுவனங்கள் நுகர்வோருக்கு நன்மைகளை வழங்க வேண்டும். மேலும், ஒரு ஆய்வின்படி, நாட்டில் 17% மக்கள் செலுத்தும் கட்டணத்துக்கான வரி சம்பந்தப்பட்ட அரசுகளிடம் சேரவில்லை. அதாவது ஒரு யூனிட் ரூ.5 என வைத்துக்கொண்டால், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் 25 கோடி நுகர்வோரிடமும் ஸ்மார்ட் மீட்டர் அடைந்தால் இந்த இழப்பு நின்றுவிடும் என்றார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.