ராமேஸ்வரம் கோவிலில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்றார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் அவர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.


அவர் ராமேஸவரத்தை அடுத்த பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை சந்திர சேகர ராவ் பார்வையிட்டார்.