கடந்த திங்கள்க்கிழமை அரசு பள்ளியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் மர்மமாக உயிரிழந்த வழக்கில் 9 ஆம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியான மாநிலம் பஞ்குலா பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு வெளியில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இறந்துள்ளார். இவரை கைப்பற்றும் முயற்சியில் 10 ஆம் வகுப்பு ஒருவர் மாணவர் காயமடைந்துள்ளார். 


இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் இறந்தவர்களுக்கிடையில் சண்டையிடுவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்றாலும், விகாஸ் குமார் என அடையாளம் காட்டப்பட்ட வகுப்பு 11 மாணவர் ஈவ்-டீஸிங்கிற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்த பின்னர் மாடியிலிருந்து குதித்துள்ளார். 


இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள், மற்றும் குற்றவாளிகள் ஆகியோரை CCTV காட்சிகளை பரிசோதித்த பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.



மேலும், இந்த வழக்கு சமந்தமாக காவல்துறையினர் தடையங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.