குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8 ஆம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடா கேரளா மாநிலத்தை சேர்ந்த 5 ஆம் அவகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியை மட்ராசாவில் இருந்து வெளியேற்றபட்டார். அவர் ஒரு குரும்படத்திர்க்காக நெற்றியில் சந்தன போட்டு வைத்ததற்காக வெளியேற்ற பட்டதால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  


இந்த நிகழ்வு குறித்து இந்த பெண்ணின் தந்தை தனது முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவானது இணையத்தில் தற்போது வைரலாக வலம்வந்து கொண்டுள்ளது.   
 
அந்த பதிவில் அவர் தனது மகளின் புகைப்படத்துடன், ஒரு சிறு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அதில், எனது மகள் பெயர்  ஹென்னா. இவர் படிப்பு, பாட்டு, நடனம், நாடகம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்.  


இவர் சமீபத்தில் ஒரு குறும்படத்திற்காக நெற்றியில் சந்தனப்பொட்டு வைய்த்துள்ளார். இதை எதிர்த்து அவளை மதரசாவிலிருந்து நீக்கியுள்ளனர். மேலும், அவர் மதரசா பொது தேர்வில் மாநில அளவில் 5 ஆவது இடத்தை பிடித்தவர். நல்லவேளை, என் மகள் மீது கல் வீசி கொள்ளாமல் விட்டது நிம்மதி என்று குறிப்பிட்டுள்ளார். 



இந்த பதிவை இணையத்தில் சுமார் 7,500 லைக்கையும் 2,800 பேர் ஷேர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!